-->

2016-02-23

இரு தாரம் அமைப்பு யாருக்கு உண்டு ? Astrology yoga for second marriage

இரு தாரம் அமைப்பு யாருக்கு உண்டு ? Astrology yoga for second marriage


Astrology yoga for second marriage
Astrology yoga for second marriage


Astrology yoga for second marriage: பொது­வா­கவே துலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விடயம். இதற்கு உரிய காரணம் என்ன எனும் ஆய்வை மேற்­கொண்டால் சந்­திர சுக்­கிர சேர்க்கை கார­ண­மா­கின்­றது.
இதற்கு இன்னும் ஒரு கேள்வி உடன் உண்டு. இடப ராசியும் சந்­திர சுக்­கிர சேர்க்கை  (conjunction of moon and venus) கொண்ட ராசி­தானே. இதற்கு ஏன் இரு தாரப்­பலன் ஜோதிட நூலில் கூறப்­ப­ட­வில்லை எனும் கேள்­வியும் உண்டு.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம். இந்த விருட்­சிக ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் ( neechabhangam ) பெறு­கின்ற நிலையும் துலா ராசிக்கு சுக­போ­கஸ்­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் (venus) நீச­பங்கம் (neechabhangam) பெறு­வதும் இந்த இரு தார நிலைக்கு கார­ண­மா­கின்­றது.
அத்­தோடு சித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய்(mars), ராகு(rahu), குரு(guru) என்­கின்ற கிரகச் சேர்க்­கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.
எனவே துலா ராசி இரு தாரப் பலன் எனும் நிலை அமை­கின்­றது. இது முற்று முழு­தாக எல்லாத் துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணி­யா­கின்­றது.

ஒரு­வரின் ஜாத­கத்­திலே களத்­திரம் எனப்­ப­டு­கின்ற 7 ஆம் இடம்(7th house) சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின நிலை அமை­வதும் களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெறு­வதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.
அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு. அதே போல் குடும்­பஸ்­தான நிலையில் மேற்­படி கிர­கங்கள் அமை­வதும் குடும்­பஸ்­தான கிர­கங்கள் நீச­பங்கம் பெறு­வதும் மேற்­படி இரு தாரப்­பலன் அமையும் நிலைகள் ஏற்­படும்.
சுக்­கிரன் நீச நிலை பெற்று அமை­வதும் இரு­தாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும்.
லாபஸ்­தான அதி­பதி 12 ஆம் இடம் அமை­வதும் களத்­தி­ரஸ்­தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை பெற்று அமை­வதும் பாவிகள் சம்­பந்தம் பெறு­வதும் 4 ஆம், 11 ஆம் அதி­ப­திகள் சேர்க்கை பெற்று விர­யஸ்­தான 12 ஆம் இடம் அமை­வதும் செவ்வாய் தோஷ­முடன் அட்­ட­மா­தி­பதிக் கிரகம் களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமை­வதும் இரு­தாரப் பலன் கொடுக்கும் நிலை­யுண்டு.
சுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை (conjunction of venus and saturn) பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவ­மானம் ஏற்­படும். கணவன் மனைவி மனக் கசப்­புகள் அமையும். 2இல் 7 இல் சூரியன் சுக்­கிரன் சேர்க்கை பெறு­வதும் களத்­தி­ரக்­கா­ரக கிரகம் பல­வீனம் அடை­வதும் இரு தார பலன் கொடுக்கும் நிலை உண்டு.
சூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை உண்டு பண்ணும்.
இந்தச் சேர்க்கை பெற்றோர் அதி­க­மான பெண் தொடர்­பு­களை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். இந்த அமைப்புக் கொண்­ட­வர்கள் பெண்­களால் பல­வித பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­கின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதா­ன­மாக இவர்கள் செயற்­பட வேண்டும்.
அத்­தோடு கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் சம்­பந்­த­மு­டைய ஒரு சில நட்­சத்­தி­ரங்கள் இரு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதி­க­முண்டு. அவை மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக மிக முக்­கி­ய­மாகும்.
இதே போல் சில­ருக்கு இரண்டாம் தாரம் (second marriage) அமையும் வாழ்­வி­யலே மிகவும் சிறப்­பாக அமையும் நிலை ஏற்­ப­டு­வ­துண்டு. ஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்­பஸ்­தான அதி­பதி பல­வீ­ன­ம­டைந்து இருப்­பதும் முதல்­தார மனை­வியின் சகோ­த­ரியே இரண்­டாம்­தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.
சந்­திரன், சுக்­கிரன் குடும்ப களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமைந்து சிறப்பு நிலை­பெற்று இருந்­தாலும் சுபக்­கி­ரக பார்வை பெற்­றாலும் வெளிப்­ப­டை­யாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும்.
இதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன், சரத்குமார், விஜயகுமார் போன்றவர் களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.

3 comments:

  1. This is a great post. I like this topic.This site has lots of advantage.I found many interesting things from this site. It helps me in many ways.Thanks for posting this again.
    Marriage Prediction Online
    Marriage Astrology
    Marriage Horoscope
    Online Horoscope

    ReplyDelete

  2. Thank you for taking the time to provide us with your valuable information. We strive to provide our candidates with excellent care.As always, we appreciate you confidence and trust in us.
    Marriage Prediction Online
    Marriage Astrology
    Marriage Horoscope
    Online Horoscope

    ReplyDelete

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP