-->

2015-11-26

How to predict dasha results

தசா பலன்கள் அறிவது எப்படி
==============================

லக்னாதிபதி பலம் மற்றும் திசா நாதன் காரக பலம் மற்றும் அம்சத்தில் உள்ள பலம் கணித்து பின்னர் தசா பலன் அறிதல் நலம்.
1. தசாநாதன் நின்ற பாவதிபத்தியம்,
2. தசா நாதன் பெற்ற பாவதிபத்தியம்,
3. தசா நாதன் பார்க்கும் பாவதிபத்தியம்
4. தசா நாதன் நின்ற சார நாதனின் ஆதிபத்தியம்,
5. தசா நாதனுடன் சேரும் கிரகத்தின் பாவதிபத்தியம்,
6. தசா நாதன் நின்ற சாரநாதன் பெற்ற ஆதிபத்தியம்.
இவற்றில் அசுப ஆதிபத்தியம் (6, 8, 12) அதிகம் எனில் அசுப பலன்களையும், சுப ஆதிபத்தியம் அதிகம் எனில் நன்மையையும் தரும் என எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு - குரு பார்வை அசுப இடங்களான 6, 8,12 பட்டால், சுபமான இடங்களாக மாறும்.
இதில் கோசாரம் கருத்தில் முக்கியமாக கொள்ளவேண்டும்.
கீழே இருக்கும் உதாரண ஜாதகத்தை எடுத்துகொள்ளலாம். அதில் குரு திசை கணிப்போம்.
குருவின் ஆதிபத்தியம் - 6, 9
குரு அமர்ந்த ஆதிபத்தியம் - 12
குரு பெற்ற சாரனதனின் (சுய சாரம்) ஆதிபத்தியம் - 6, 9
குரு பார்க்கும் ஆதிபத்தியம் - 4, 6, 8 (குரு பார்வை என்பதால் ஆறு மற்றும் எட்டு சுப தன்மை அடைகிறது).
பன்னிரெண்டும் இடது அதிபதி உச்சம் பெற்று குருவின் சுப செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.
மொத்த பாவங்கள் - 4, 6, 8, 9, 12
இதில் குரு தான் நிற்கும் பாவத்தை கெடுப்பார் என்பதால், பன்னிரெண்டாம் பாவத்தில் இருக்கும் குரு, அசுப விரயத்தை தடுத்து, சுப விரயமாக தன் ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குரு செய்யவைத்தார். ஒன்பதாம் பாவ (9) செயல்களான வேத, பாட சாலைகள், இலவச கல்யாணம், மற்றும் கோவில் கட்டும் பணியை செய்யவைத்தது, நான்காம் (4) பாவ செயல்களான ஆரோக்கியம், வீடு மனை வாங்க சுப விரையம் செய்தது. குரு பார்வை ஆறாம் (6) இடமான எதிரிகள், கடன் மற்றும் எட்டாம் (8) இடமான அவமானம், விபத்தில் இருந்து காத்தது..
இங்கே, குரு திசையில் அனைத்தும் சுப பாவங்களே. மேலும் இவை அனைத்தும் கோசார குரு ஒன்பதாம் இடமான மேஷத்திற்கும், இரண்டாம் இடமான துலாதிற்கும் வந்த போது சுப விரையம் ஏற்பட்டது.
அன்புடன்,
மணிகண்டன் பாரதிதாசன் B.Tech., MBA

2015-11-20

Effects vakra or retrograde planets

வக்கிர கிரகத்தின் பலன்
======================
ஒரு அசுப அதிபத்தியம் பெற்ற சுப/அசுப கிரகம் வக்கிரம் பெற்றால் (அம்சத்தில் கெடாமல்) அது தான் பெற்ற அதிபத்தியம் மூலம் தற்காலிக யோகம் மட்டுமின்றி, தன் காரகத்துவ பலனையும் சேர்த்து தரும் அவையாவன:
1. வக்கிர செவ்வாய் - வீரத்தையும், தைரியத்தையும் தரும்.
2. வக்கிர புதன் - புத்தி கூர்மையும், சமயோகித புத்தியும் தரும்.
3. வக்கிர சுக்கிரன் - ஆடம்பரத்தையும், கலை தாகத்தையும் தரும்.
4. வக்கிர குரு - நுண்ணறிவையும், ஒழுக்கத்தையும் பக்குவத்தையும் தரும்.
5. வக்கிர சனி - கடின உழைப்பையும், நேர்மையையும் தரும்.

neecha bhanga raja yoga : How does a planet get Neechabhanga?

ஒரு கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும்
=======================================
1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்)
3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல்.
4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ யோகம்)
5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல்.
6. நீச்ச கிரகம் வர்கோதமம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
7. நீச்ச கிரகம் வக்கிரம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
8. சந்திர கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.
9. லக்ன கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.
10. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் சுய நட்சத்திர சாரம் பெறுதல்
11. நீச்ச கிரகம் சுய சாரம் பெறுதல் (இது புதனுக்கு மட்டுமே சாத்தியம் - நீச்ச பங்க ராஜ யோகம்)
நீச்ச பங்கமடையும் கிரகம், தன் திசையில் முதலில் குறைவான பலன்களை கொடுத்து பின் நற்பலன்களை கொடுக்கும். இதில் நீச்ச பங்க ராஜயோகம் அடையும் கிரகம், மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.


Vedic Astrology Lessons has published more articles about Neechabhanga rajayoga. some of articles are given below:


 

2015-11-13

Rasi - Love - and - Marriage - Astrology

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும்.
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடும்
எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியும்
திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் கேந்திர பகுதியான ஏழாமிடம் சிறப்பாக அமைந்து விட்டால் மனிதனின் இல்லறம் நல்லறமாக இருக்கும் நல்லறமான இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகளே சமூக வளர்ச்சிக்கு தூண்களாக இருப்பார்கள்.
இல்லறம் கெட்டுவிட்டால் குடும்பம் மட்டுமல்ல நாடும் கெட்டு விடும். அதனால் தான் தராசு போல் நீதி வழியில் நின்று காம உணர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் விருப்பம்.

Secrets for being wealthy always

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
நகம் ,முடி சாப்பிடக்கூடாது.
வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

நன்றி
வர்மக்கலை ஆசான் பிரம்ம ஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியா 9894285755.

2015-11-12

Cure for AIDS in 48 days

ayurvedic medicine for hiv aids




48 நாளில் Aids-ஐ (எய்ட்ஸ்) குணமடைய வைக்கும் மூலிகை..! உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் சித்தர்களின் கண்டுபிடிப்பு..! பகிருங்கள் பயன்பெறட்டும்...




© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP