-->

2016-02-29

நவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? Effect of different planets in First House

நவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? Effect of different planets in First House

Effect of different planets in First House
Effect of different planets in First House

சூரியன்: Effect of Planet Sun in First House
ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் சூரியன் இருந்தால் உஷ்ணதேகமுள்ளவர். பிடிவாத குணமுடையவர். ஜாதகர் சுறுசுறுப்பாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். தைரிய சாலியாகவும் இருப்பார். லக்னத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால், எதிலும் முதன்மை வகிக்கும் குணம், படைத்தவராக இருப்பார் சிவப்பாக இருப்பார்.

சந்திரன்: Effect of Planet Moon in First House
லக்னத்தில் சந்திரன் பலமுடன் காணப்பட்டால் குளுமையாக இருப்பார். அழகாக இருப்பார். அடிக்கடி ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார். எப்பொழுதும் கற்பனையில் மூழ்கியிருப்பார். கதை சொல்வதில் வல்லவர், மனைவிக்குப் பிரியமானவராக நடந்து கொள்வார்.

செவ்வாய்: Effect of Planet Mars in First House
கோபத்திற்கு காரகத்துவமான செவ்வாய் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் முன்கோபியாக இருப்பார். முரட்டு சுபாவமுடையவர். கருணையில்லாதவர். கல்வியில் ஊக்கம் குறையும். முகத்தில் தழும்பு இருக்கும். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தந்தைக்கு ஆகாது.

புதன்: Effect of Planet Mercury in First House
லக்னத்தில் புதன் இருந்தால் புத்திசாலியாக இருப்பார். கல்வி கேள்விகளில் சிறந்தவர், ஞானமுள்ளவர், செல்வசேர்க்கை உள்ளவர். சுகமுள்ளவர் சமயோசிதமாக பேசும் வல்லமைப் படைத்தவர் நல்லவர்.

குரு: Effect of Planet Jupiter in First House
லக்னத்தில் குரு இருந்தால், பல சாஸ்திரங்களை அறிந்தவர், அறிவாளி, பலரும் போற்றும் நிலையை உடையவர். நல்லவர், வல்லவர், சுகமாக வாழக் கூடியவர். குருவின் அருள் பெற்றவர் தீர்க்காயுள் உடையவர்.

சுக்கிரன்: Effect of Planet Venus in First House
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், அழகாக இருப்பார். அமைதியாக இருப்பார். முகவசீகரம் உடையவர். சாப்பாட்டு விஷயத்தில்ஆர்வம் உள்ளவராக இருப்பார்.
கணக்கு விசயத்தில் விபரமாக இருப்பார். மனைவியிடத்தில் பிரியமுள்ளவர். சிக்கனமாக இருப்பார். ஒரு சிலர் இவரை இதன் காரணமாக கருமி என்று கூட சொல்வார்கள். முகத்தில் எப்பொழுது மகிழ்ச்சி தாண்டவமாகும் சிவப்பாக இருப்பார்.

சனி: Effect of Planet Saturn in First House
சனி லக்னத்தில் இருந்தால் கருப்பாக இருப்பார். சற்று முன்கோபி சிடுசிடுவென்று இருப்பார். நிறைய கலைகளை கற்றுத் தேர்ந்தவர். மற்றவர்கள் இவரைத் தவறாக நினைத்துக் கொள்ளும்படி பெயர் எடுப்பார். ஞானம் உள்ளவர் உற்சாகமாக இருப்பார். தீர்க்காயுள் உடையவர்.

ராகு: Effect of Planet Rahu in First House
இலக்கனத்தில் ராகு இருந்தால் நிறம் சற்று குறைவாகவே ஜாதகர் இருப்பார். ஏதேனும் ஒரு வியாதியால் அவதிப்படுவர் முகத்தில் பல்வரிசை சீராக இருக்காது.

கேது: Effect of Planet Ketu in First House
ஞானம் உள்ளவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளவர். தெய்வீக சிந்தனை உள்ளவர்.

2016-02-27

ஜோதிடத்தில் சந்திரனின் முக்கியத்துவம் - Importance of planets moon in Vedic astrology

ஜோதிடத்தில் சந்திரனின் முக்கியத்துவம் - Importance of planets moon in Vedic astrology

Importance of planets moon in Vedic astrology
Importance of planets moon in Vedic astrology

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும்  தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்  காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

சந்திரனின் முக்கியத்துவம் - Importance of planets of moon 

ஒரு ஜாதகத்தை(horoscope) எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும்(lagna). இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்(rasi). ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன்(moon) எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக்(house) குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன்  இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள்(yogas), அவயோகங்கள்(inauspicious yogas), தடைகள்(obstacles) ஏற்படுகின்றன. அந்த  வகையான இடையூறுகளில்(interruption) ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

சந்திராஷ்டமம்

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில்(8th house) இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள்(obstacles), மனச்சங்கடங்கள்(Disheartening),  இடையூறுகள்(interruption) போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம்(family), வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை(2nd house) பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன்(bride), மணமகள்(groom) ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம்(marriage muhurtham) வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம் (house warming ceremony),  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் (important discussions) ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் (family things) பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் (Negative thoughts) தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம் (exaltation), ஆட்சி (own house), நீச்சம் (debilitation)  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி (memory loss) உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள் (journeys), மனமகிழ்ச்சி, உற்சாகம்(cheer), தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள் (spiritual journeys, தெய்வ பக்தி (pious), நல்ல எண்ணங்கள் (good thoughts), தெளிந்த மனம் (pure mind). தாய் மாமன்  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள் (Grudges), எரிச்சல் (Irritability), டென்ஷன் (tension). வீண் விரயங்கள். மறதி (Oblivion), நஷ்டங்கள் (losses).

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள் (graces of love), பயணங்கள் (journeys), சுற்றுலாக்கள், குதூகலம் (fun). பெண்களால் லாபம் (profit from women), மகிழ்ச்சி (happy).

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் (Meditation) மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    அனுஷம்
பரணி    கேட்டை
கிருத்திகை    மூலம்
ரோகிணி    பூராடம்
மிருகசீரிஷம்    உத்திராடம்
திருவாதிரை    திருவோணம்
புனர்பூசம்    அவிட்டம்
பூசம்    சதயம்
ஆயில்யம்    பூரட்டாதி
மகம்    உத்திரட்டாதி
பூரம்    ரேவதி
உத்திரம்    அஸ்வினி
அஸ்தம்    பரணி
சித்திரை    கிருத்திகை
சுவாதி    ரோகிணி
விசாகம்    மிருகசீரிஷம்
அனுஷம்    திருவாதிரை
கேட்டை    புனர்பூசம்
மூலம்    பூசம்
பூராடம்    ஆயில்யம்
உத்திராடம்    மகம்
திருவோணம்    பூரம்
அவிட்டம்    உத்திரம்
சதயம்    அஸ்தம்
பூரட்டாதி    சித்திரை
உத்திரட்டாதி    சுவாதி
ரேவதி    விசாகம்

2016-02-23

இரு தாரம் அமைப்பு யாருக்கு உண்டு ? Astrology yoga for second marriage

இரு தாரம் அமைப்பு யாருக்கு உண்டு ? Astrology yoga for second marriage


Astrology yoga for second marriage
Astrology yoga for second marriage


Astrology yoga for second marriage: பொது­வா­கவே துலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விடயம். இதற்கு உரிய காரணம் என்ன எனும் ஆய்வை மேற்­கொண்டால் சந்­திர சுக்­கிர சேர்க்கை கார­ண­மா­கின்­றது.
இதற்கு இன்னும் ஒரு கேள்வி உடன் உண்டு. இடப ராசியும் சந்­திர சுக்­கிர சேர்க்கை  (conjunction of moon and venus) கொண்ட ராசி­தானே. இதற்கு ஏன் இரு தாரப்­பலன் ஜோதிட நூலில் கூறப்­ப­ட­வில்லை எனும் கேள்­வியும் உண்டு.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம். இந்த விருட்­சிக ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் ( neechabhangam ) பெறு­கின்ற நிலையும் துலா ராசிக்கு சுக­போ­கஸ்­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் (venus) நீச­பங்கம் (neechabhangam) பெறு­வதும் இந்த இரு தார நிலைக்கு கார­ண­மா­கின்­றது.
அத்­தோடு சித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய்(mars), ராகு(rahu), குரு(guru) என்­கின்ற கிரகச் சேர்க்­கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.
எனவே துலா ராசி இரு தாரப் பலன் எனும் நிலை அமை­கின்­றது. இது முற்று முழு­தாக எல்லாத் துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணி­யா­கின்­றது.

ஒரு­வரின் ஜாத­கத்­திலே களத்­திரம் எனப்­ப­டு­கின்ற 7 ஆம் இடம்(7th house) சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின நிலை அமை­வதும் களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெறு­வதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.
அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு. அதே போல் குடும்­பஸ்­தான நிலையில் மேற்­படி கிர­கங்கள் அமை­வதும் குடும்­பஸ்­தான கிர­கங்கள் நீச­பங்கம் பெறு­வதும் மேற்­படி இரு தாரப்­பலன் அமையும் நிலைகள் ஏற்­படும்.
சுக்­கிரன் நீச நிலை பெற்று அமை­வதும் இரு­தாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும்.
லாபஸ்­தான அதி­பதி 12 ஆம் இடம் அமை­வதும் களத்­தி­ரஸ்­தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை பெற்று அமை­வதும் பாவிகள் சம்­பந்தம் பெறு­வதும் 4 ஆம், 11 ஆம் அதி­ப­திகள் சேர்க்கை பெற்று விர­யஸ்­தான 12 ஆம் இடம் அமை­வதும் செவ்வாய் தோஷ­முடன் அட்­ட­மா­தி­பதிக் கிரகம் களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமை­வதும் இரு­தாரப் பலன் கொடுக்கும் நிலை­யுண்டு.
சுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை (conjunction of venus and saturn) பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவ­மானம் ஏற்­படும். கணவன் மனைவி மனக் கசப்­புகள் அமையும். 2இல் 7 இல் சூரியன் சுக்­கிரன் சேர்க்கை பெறு­வதும் களத்­தி­ரக்­கா­ரக கிரகம் பல­வீனம் அடை­வதும் இரு தார பலன் கொடுக்கும் நிலை உண்டு.
சூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை உண்டு பண்ணும்.
இந்தச் சேர்க்கை பெற்றோர் அதி­க­மான பெண் தொடர்­பு­களை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். இந்த அமைப்புக் கொண்­ட­வர்கள் பெண்­களால் பல­வித பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­கின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதா­ன­மாக இவர்கள் செயற்­பட வேண்டும்.
அத்­தோடு கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் சம்­பந்­த­மு­டைய ஒரு சில நட்­சத்­தி­ரங்கள் இரு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதி­க­முண்டு. அவை மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக மிக முக்­கி­ய­மாகும்.
இதே போல் சில­ருக்கு இரண்டாம் தாரம் (second marriage) அமையும் வாழ்­வி­யலே மிகவும் சிறப்­பாக அமையும் நிலை ஏற்­ப­டு­வ­துண்டு. ஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்­பஸ்­தான அதி­பதி பல­வீ­ன­ம­டைந்து இருப்­பதும் முதல்­தார மனை­வியின் சகோ­த­ரியே இரண்­டாம்­தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.
சந்­திரன், சுக்­கிரன் குடும்ப களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமைந்து சிறப்பு நிலை­பெற்று இருந்­தாலும் சுபக்­கி­ரக பார்வை பெற்­றாலும் வெளிப்­ப­டை­யாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும்.
இதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன், சரத்குமார், விஜயகுமார் போன்றவர் களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.

2016-02-21

மதுவிற்கு அடிமை யார்? who becomes addicted to alcohol

மதுவிற்கு அடிமை யார்? : who becomes addicted to alcohol

சார ஜோதிட முறையில் 6ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

6ம் பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவங்களாகிய 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.

அதே நேரத்தில் தசா பத்திகளும் 6ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளை ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை கொண்டு தசா புத்திகள் நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.

2016-02-19

அரசாங்கம் வேலை யாருக்கு? Astrology yoga for Government Job

அரசாங்கம் வேலை யாருக்கு? Astrology yoga for Government Job


1.சூரியன் (sun) நல்ல நிலையில் 10ல் (tenth house) அமரவேண்டும்.அதை உத்தியோககாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் (exalted)  பெற்று பார்த்தால் அரசாங்கம் வேலை (government job) உறுதி.
2. குரு (jupiter) 10 ல்ஆட்சி உச்சம் பெற்றால் வங்கி ,இண்சூரன்ஸ் (insurance), போன்றவற்றில் ஜாதகர் வேலை பார்ப்பார். கல்வித்துறை உயர்அதிகாரி (higher officer in education department).
3.10ல் செவ்வாய் (mars in 10th house) இருந்தால் மின்சாரத்துறை அதிகாரி (officer in electricity department), இராணுவம் (military) ,போலீஸ் (police), காவல் சம்மந்தமான வேலை உறுதி
4.10ல் சனி (sani in 10th house) இருந்ததால் காவல் சம்மந்தமான துறையில் உயர் பதவி (job in police department) .அடிமை நிலை, தாழ்ந்நிலை வேலைகள்.அராசாங்க வக்கீல் (government advocate)  போன்ற வேலைகள்.
5.சந்திரன் 10ல் (sun in 10th house) இருந்தால் மக்கள் தொடர்பு, அயல் நாட்டு தூதுவர் கப்பல் படையில் அதிகாரி.
5.கேது10ல் (ketu in 10th house) இருந்தால் அராசாங்க மருத்துவர்,இந்து அறநிலையத்துறை அதிகாரி.
6.புதன் 10ல் ( mercury in 10th house) இருந்தால் கணக்கு தணிக்கத்துறை அதிகாரி,உளவுதுறை அதிகாரி.
7.இராகு 10ல் ( Rahu in 10th house) இருந்தால் வருவாய்துறை,பத்திரப்பதிவு அதிகாரி.
8.சுக்கிரன் 10ல் (Venus in 10th house) இருந்தால் கைத்தறித் துறை அதிகாரி.


குறிப்பு: ஜாதகத்தில் 6ம் இடத்தில் கிரகம் ( planet in 6th house) இருந்தால்தான் அரசாங்கம் வேலை.ஜாதகத்தில் ராஜகிரகமான குரு,சனி, சூரியன்,செவ்வாய் கெடக்கூடாது.

2016-02-17

ஜாமக்கோள் பலன்கள் | Some Golden Rule in Vedic Astrolog

ஜாமக்கோள் பலன்கள்  :  Some Golden Rule in Vedic Astrology

1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்
6. 4க்கு கேந்தித்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு
9. பதன உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்
19. குரு கேது தாமத்த்திருமணம்
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டுதிருமணம்
22. செவ்வாய் சுக்கரன சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்காதங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராகசை அதிகமாகும் காலம்
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு)
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்
33. 3ல் சனி(அ) வாக்கரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதம்
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செவ்வாய் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. ஆருடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்கது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்)
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்
64. 8ம் ஆதி 7ல் முதுகு வலி
65. குரு புதன் அதிக நண்பர்கள்
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தைட்டுப்பாடு
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு
76. 10ல் வக்ரம் கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை
78. 4,6,8,12-ல் முதலீடு தொழில் வேண்டாம், சுயதொழில் அமைய போரட்டம்

2016-02-16

Baby Gender Prediction Chart

Chinese Gender Predictor Chart :

Chinese gender prediction chart was found buried in a Royal Tomb near Beijing, China by the Chinese scientists about 700 years ago.

You can choose to get a boy or a girl by the Chinese gender prediction chart. The woman's age from 18 to 45 years is mentioned in horizontal columns while the months when the baby is conceived. i.e. when the pregnancy starts, are indicated in the vertical columns.
Chinese Gender Predictor Chart

Chinese Gender Predictor Chart


X stands for male and O for female.  

For instance if the woman is 25 years old and her baby is conceived January (according to Chinese Lunar Calendar) then the baby will be a girl.

ராசி வீடுகள் : The different houses in vedic astrology


ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11 வீடுகளும் லக்கினத்தைப் பொருத்தே அமையும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் லகனத்திற்கு கீழ் படிபவை.
கேந்திரம்;:
1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இவை விஷ்ணு கேந்திரம் எனப்படும்.
1-ம் வீடு ஜாதகரைக் குறிக்கிறது.
4-ம் வீடு தாய், வீடு, வாகனம்,
7-ம் வீடு மனைவி, பங்குதாரர்
10-ம் வீடு தொழிலைக் குறிக்கிறது.
எனவே 4 வீடுகளுமே வாழ்க்கையின் முக்கிய கூறுகளை சொல்கின்றன. கேந்திரத்தில் உள்ள கிரகங்களும் அதன் அதிபதிகளும் நன்மையைச் செய்வர் எனபது உறுதி. தேக சுகவிஷயங்களை குறிப்பவை கேந்திரங்கள் ஆகும். சுபர்கள்(குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்)  1.4.7 அல்லது 10-ம் வீட்டிற்கு அதிபதியாதல் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும்.
திரிகோணம்:
1, 5. 9, திரிகோண வீடுகள். மிகவும் சுபமான வீடுகள், மனோ ரீதியான செயல்பாடுகளை விளக்கும். இவை லஷ்மி ஸ்தானங்கள் என அழைப்பர். திரிகோணாதிபதிகள் சுபத்தையே தருவர். கேந்திரம் மற்றும் கோணத்தில் உள்ள கிரகங்கள் ஜாதகரின் உடல் நலம், அந்தஸ்து, தனம், முன்னேற்றம், நடத்தை, ஆகிய முக்கிய குணங்களை முடிவு செய்ய வல்லவை.
பணபரம் :
2,5,8,11-ம் வீடுகள் பணம் வருவதைச் சொல்லும்.
2-ம் வீடு தனஸ்தானம்
5-ம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம்
8-ம் வீடு ரந்த்ர ஸ்தானம்
11-ம் வீடு லாப ஸ்தானம் ஆகும்.
ஆபோக்லீயம் :
3, 6, 9, 12-ம் வீடுகள் ஆபோக்லீயம் வீடுகள் ஆகும். நிலையற்றவை எனப் பொருள்படும். 3, 6, 12-ல் உள்ள சுப கிரகங்கள் நன்மை செய்ய மாட்டார்கள். ஆனால் பாவங்கள் நன்மையைச் செய்யும்.
உபஜெய வீடுகள்:
3 6 10 11-ம் வீடுகள் உப ஜய வீடுகள் ஆகும். வெற்றிக்கு உறு துணையாக உள்ள வீடுகள் ஆகும்.
3-ம் இடம்- வீரம், வெற்றியைக் குறிக்கும்.
6-ம் இடம்- எதிரிகள், வழக்கு, கடன்.
10-ம் இடம்- தொழில்
11-ம் இடம்- லாபஸ்தானம் ஆகும்.
ஆகவே இவ்வீடுகள் வெற்றிக்கு துணை செய்யும் வீடுகள் ஆகின்றன.
ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரக ஸ்தானம்:
3 8-ம் வீடுகள் ஆயுளைக் குறிப்பவை.
2 7-ம் வீடுகள் மரணத்தைக் குறிக்கும். ஆயுள் ஸதானங்களாகிய 3 8-ம் வீடுகளுக்கு 12-ல் உள்ளன. எனவே மாரகம் செய்கின்றன.
மறைவு ஸ்தானங்கள்:
6 8 12-ம் வீடுகள் தீய வீடுகள் என சொல்லப் படுகின்றன. கடன், நோய், இழப்பு, துக்கம் போன்றவற்றைச் சொல்வது துர் ஸ்தானங்கள் என்றும் சொல்வதுண்டு.
திரிகோண ராசிகள்   :    1, 5 , 9ம் வீடுகள்
கேந்திர ராசிகள்      :    1, 4 , 7 . 10ம் வீடுகள்
உப ஜெய ராசிகள்    :    3, 6 , 11ம் வீடுகள்
துர்ஸ்தான வீடுகள்   :     6, 8 , 12ம் வீடுகள்
அறம்- தர்ம வீடுகள்      :       1, 5 , 9
பொருள்-அர்த்த வீடுகள்   :       2, 6, 10
இன்பம்-காம வீடுகள்      :       3, 7, 11
வீடு-மோட்ச வீடுகள்   :       4, 8, 12

1 முதல் 6 வரை உள்ள வீடுகளை கண்ணுக்கத் தெரியாத பகுதி என்றும் 7 முதல் 12 வரை உள்ள வீடுகள் கண்ணிற்குத் தெரியும் பகுதி எனவும் சொல்வர். இதே போல் 10-ம் வீடு முதல் 3ம் வீடு வரை உள்ள பகுதியை கிழக்குப்பகுதி எனவும், 4 முதல் 9 வரை உள்ளதை மேற்குப் பகுதி எனவும் சொல்வர்.

Also read : பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் | Houses in Vedic Astrology
பன்னிரண்டு கிரகங்களின் பொது குணம் | General Characteristics of 12 planets in Vedic astrology

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP