-->

2019-09-21

குரு பெயர்ச்சி 2019 - மேஷம் ராசி

குரு பெயர்ச்சி 2019:


குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு (அதாவது தனது ஆட்சி மூல திரிகோண வீட்டிற்கு) பெயர்ச்சி ஆகி செல்ல உள்ளார்.அது வாக்கியப்படி அக்டோபர் மாதத்தில் 29ம் தேதியிலும் திருக்கணிதப்படி நவம்பர் 5ம் தேதியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள்.அது குறித்த பலனை பார்ப்போம்.கோச்சார பலனோடு சுய ஜாதகமும் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேஷம் ராசி:


கடந்த ஓர் ஆண்டு காலமாகவே குரு உங்கள் ராசிநாதனின் மற்றொரு வீடான விருச்சிகத்தில் அவர் சஞ்சரித்தாலும் அது உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8ம் வீடு என்பதால் குரு முழு பலனை கொடுத்து விட்டார் என்று சொல்வதற்கு இல்லை.

மேஷத்தின் பாக்கியாதிபதி குரு மறைந்ததும் பாக்கிய ஸ்தானத்தில் சனி சென்று அமர்ந்து கொண்டமையாலும் பல அதிர்ஷ்ட குறைபாடுகள் ஏற்பட்டு இருக்க கூடும்.ஏனென்றால் திரிகோண வீடுகளை சனி,ராகு போன்ற பாபர்கள் வெறுப்பார்கள்.

இனி ஏற்பட போகும் மாற்றம் மிக சிறந்த அமைப்பு ஆகும்.பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிக்கும் மிஞ்சிய மூல திரிகோணம் அடைந்து லக்கினத்தை பார்க்க போகிறார்.குறிஞ்சி மலர் பூத்தார் போல் தான் இந்த அமைப்பும்.அவ்வளவு சிறப்பான மற்றும் அரிதான அமைப்பு.

குரு லக்கினத்தை பார்ப்பதால் இனி வாழ்வில் நம்பிக்கை பெருகும்.புதிய விஷயங்களை தைரியமாக செய்யலாம் (செவ்வாயின் மேஷ ராசி அன்பர்களுக்கு தனியாக தைரியம் பற்றி பாடம் சொல்லி தர தேவை இல்லை).குரு பார்வை வந்து விட்டதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் விரைவில் கை கூடி வரும்.

குரு அடுத்து 3ம் வீட்டை பார்ப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும்.சகோதர வழி நன்மைகள் உண்டாகும். தைரிய ஸ்தானமும் அதுவே என்பதால் இனி யோசித்த அனைத்து விஷயங்களிலும் முழுமையாக தைரியத்துடன் செயல் பட முடியும்.

அடுத்து குரு பகவான் மற்றொரு திரிகோண ஸ்தானமான 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை வரம் நோக்கி இருப்பவர்களுக்கு புத்திர காரகன் குரு அதை கனிவோடு வழங்குவார்.குழந்தைகள் உள்ள மேஷ ராசியினருக்கு அவர்கள் மூலம் நன்மையும் குழந்தைகளுக்கும் நன்மையும் ஏற்படும்.அது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகளும் பிறக்கும்.

குருவோடு கேதுவும் இருப்பார் என்பதையும் முழு பலன்கள் சனி பெயர்ச்சிக்கு பின்பே முழுமையான நற்பலன்கள் அனுபவிக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.கேது உடனிருந்து குருவோடு சேர்வது நன்மை தரும் அமைப்பாகும்.

தந்தை, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களோடு நல்லுறவை பேண வேண்டும்.

தொழில் ,செலவுகள், வாழ்க்கை துணையோடு ,நண்பர்களோடு அனுசரித்து போக வேண்டிய காலகட்டமும் இதுவே என்பதையும் கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன். அது ஏன் என்பதை மற்றோரு தருணத்தில் கூறுகிறேன்.

பரிகாரம்:


குரு செவ்வாய் இருவரும் தொடர்பு பெறும் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்து வர தொட்டது துலங்கும்.

By
Ashwin Kumar

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP