-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடக ராசி


கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:


கடக ராசிக்கு இத்தனை நாட்களாக ராசியை பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் பாவத்தில் இருந்து பார்த்த குரு பகவான் இனி ருண ரோக சத்ரு ஸ்தானமாகிய 6ம் பாவத்தில் ஆட்சி வலுவிற்கு செல்கிறார்.

ஆறாம் பாவத்தில் சுப கிரகம் மறைவது அதுவும் உங்கள் ராசியின் பாக்கியதிபதி குரு மறைவது பின்னடைவு என்பதை மறுப்பதற்கில்லை.ஏனெனில் அடுத்து சனி பகவான் தனது சொந்த வீடாகிய மகரத்தில் இருந்து உங்கள் ராசியை தனது 7ம் பார்வையில் பார்த்து குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனாலும் இறுதியில் சுய ஜாதகத்தில் உள்ள அமைப்புகளே ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6ல் ஆட்சி பெற்ற குருவின் 5ம் பார்வை 10ல் படுவதால் தொழில் தொடர்பான விஷயங்களில் சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் 7ம் பார்வை 12ம் வீடான மிதுனத்தில் விழுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். எனவே பணத்தை அளவோடு செலவு செய்வது நல்லது.அதே சமயம் தூர தேசம் கடந்த பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

இறுதியாக குருவின் 9ம் பார்வை 2ல் விழுவதால் நிச்சயம் வருமானத்திற்கு சில வழிகள் பிறக்கும்.குடும்பத்திலும் அமைதி நிலவும்.

இந்த குரு பெயர்ச்சியில் கடக ராசி அன்பர்கள் நிதானமாக திட்டமிடலுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் இதுநாள் வரையில் சுப கிரகமான குருவின் பார்வையில் இருந்த ராசி இனி உங்கள் ராசிநாதரை ஜென்ம விரோதியாக கருதும் சனி பகவானின் பார்வையில் இருக்கும் என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் முறையான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் எத்தகைய சிக்கலையும் தாண்டும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. அமைதியும் மன உறுதியும் உள்ள கடக ராசிக்காரர்கள் சவாலை எதிர் கொண்டு வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

பரிகாரம்:


பௌர்ணமி அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்வதும் வியாழன் தோறும் குரு பகவானுக்கு எலுமிச்சை நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்ல பலன்களை கொடுக்கும்.மன குழப்பம் ஏற்படாமல் இருக்க தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

By
Ashwin Kumar

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP