-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுன ராசி

மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:


மிதுன ராசிக்காரர்கள் ஏற்கெனவே இந்த ராகு கேது சனி ஆகிய மூன்று பாப கிரகங்களின் தாக்கத்தால் சோர்ந்து போய் உள்ளார்கள். இப்பொழுது குரு வந்து என்ன செய்ய போகிறார் என்று யோசிக்க கூடும்.

மற்றொரு பக்கம் அஷ்டம சனி வேறு வெயிட்டிங் லிஸ்டில் வில்லங்கம் செய்ய காத்து கொண்டு இருப்பதாக பல்வேறு முனைகளில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு கொண்டே இருப்பதால் ஒரு வித குழப்பம். சரி இந்த குரு பெயர்ச்சியால் ஏதாச்சும் நன்மை உண்டா??அதையும் தான் பார்ப்போமே...

குரு பகவான் தனது சொந்த வீடாகிய தனுசுவில் இருந்து உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்வார்.இது அஷ்டம சனியின் கஷ்ட காலங்களில் இருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட ஒரு ஆண்டு காலத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

குருவின் 5ம் பார்வை லாப ஸ்தானமாகிய 11ம் வீட்டில் இருப்பதால் ஓரளவு நன்மைகள் உண்டாகும். ஏன் ஓரளவு என்று கூறி உள்ளேன் என்ற கேள்விக்கான பதில் சனி பெயர்ச்சி பலன்கள் கட்டுரையில் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

அடுத்து குரு பகவான் நேரடியாக ராசியை 7ம் பார்வையாக பார்ப்பதால் இந்த ராகு கேது தரும் தொல்லைகள் சற்று விலகி மன தைரியத்துடன் கூடிய நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.குழப்பங்கள் குறையும்.
இறுதியாக குருவின் 9ம் பார்வை 3ம் வீட்டில் படுவதால் உங்களுக்கு முயற்சிகள் என்பது அதிகமாகவே இருக்கும். அதே சமயம் மனதில் சவாலை சமாளிக்கும் இனம் புரியாத தைரியம் பிறக்கும்.இளைய சகோதர வகையில் நற்பலன்கள் உண்டாகும்.

ஆயினும் அதன் பிறகு தான் கதையே ஆரம்பமாகும்.சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும்.அதிலும் அடுத்த 2020 குரு பெயர்ச்சி என்பது அஷ்டம குருவாகி அவரே ஆட்சி பெற்ற சனியின் வீட்டில் நீசம் பெற்று கடுமையாக என்று தாராளமாக சொல்ல கூடிய அளவுக்கு பலன்கள் இருக்கும்.இதை ஏன் சொல்கிறோம் என்றால் 8ல் சுப கிரகம் நீசம் பெற்று அங்கேயே துர்ஸ்தானத்தின் அதிபதியும் இயற்கை பாப கிரகமும் ஆகிய சனி ஆட்சி வலுவில் அஷ்டம சனி நடக்க இருப்பதால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இது பயமுறுத்த அல்ல.நீங்கள் புதிய முயற்சி,கடன் பெறுதல்,ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்ற விஷயங்களில் விலகியே இருக்க வேண்டும். சுய ஜாதக வலு இருந்தால் ஓரளவு பாதகம் இல்லாமல் தப்பித்து கொள்ள முடியும்.ஆயினும் நிதானமே பிரதானம் என்பதை ஓர் ஆண்டு கழித்து தாரக மந்திரமாய் கொள்ளவும்.

இருப்பினும் புத்திசாலி கிரகமான புதனின் ராசியில் பிறந்த நீங்கள் தங்கள் அறிவாற்றல் மூலம் சிக்கலை திறம்பட சமாளித்து வருவீர்கள்.அவர் மாத கணக்கில் சுக்கிரனோடு அடிக்கடி வீட்டில் வந்து தங்கி சிக்கல்களுக்கு சில மருந்துகள் கொடுக்கவே செய்வார்.

பரிகாரம்:


தொடர்ந்து சிவனை நோக்கி வழிபடவும்.சனி கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து கொள்ள வேண்டும். மற்ற பரிகாரங்கள் சனி பெயர்ச்சியில்.

By
Ashwin Kumar

1 comment:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP