-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகர ராசி

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

குரு பெயர்ச்சி இந்த முறை மகர ராசிக்கு 12ம் ராசியான தனுசுவில் நிகழ்கிறது.

அதாவது விரய ஸ்தானமான 12ம் பாவத்திற்கு வருகிறார் என்று அர்த்தம்.12 என்றாலே மறைவு ஸ்தானம்.அது துர்ஸ்தானம் என்று நமக்கு பழக்க படுத்த பட்டுள்ளது.

ஆனாலும் அது 3ம் பாவத்தை விட மோசமான பாவம் இல்லை என்பது நம் அறிவுக்கு எட்டிய உண்மை.

குருவின் பெயர்ச்சியை விட சனியின் பெயர்ச்சிக்கே நீங்கள் அதிகம் எதிர்நோக்கி உள்ளீர்கள் என்பது புரிகிறது. இருப்பினும் குரு என்ன செய்வார் என்று ஒரு கணம் பார்த்து விடுவோமே.

குருவின் 5ம் பார்வை 4ம் வீட்டில் படுவதால் வாகன வீடு போன்ற விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதை செய்து காட்டவும் முயற்சி செய்வீர்கள்.அதற்காக கடனை வாங்கியவது செய்ய வேண்டும் என்ற ஆசையை சனி பகவான் கன கச்சிதமாக தூண்டி விடுவார்.

அடுத்து குருவின் 7ம் பார்வை 6ம் வீட்டில் படுவதால் கேட்டவுடன் கடன் கிடைக்கும்.கடன் தொகை அதிகரிக்கும்.அதேபோல் வேலை தேடுபவர்களுக்கு சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு வேலை கிடைக்கும்.

குருவின் 9ம் பார்வை 8ல் படுவதால் ஆயுள் தொடர்பான பயங்கள் நீங்கும்.மறைமுக செயல்பாடுகள் எதிரிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.

ஒட்டுமொத்தமாக குறிப்பிட வேண்டுமெனில் குரு உங்கள் ஆசையை தூண்டி விடுவார்.சனி அதை நிறைவேற்றி கொடுப்பார்.அதன் பிறகு சனியின் ஆட்டம் ஆரம்பிக்கும்.அடுத்த பெயர்ச்சியில் ஜென்ம சனியோடு ஜென்ம குருவும் ஏற்பட்டு பெரும் மன உளைச்சல் வர வாய்ப்புள்ளது. அதுவும் உங்கள் ராசியில் நீசம் பெறுவார் குரு.

எனவே ஆசைகளுக்கு கடிவாளம் போட்டு இருப்பை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்ள படுகிறார்கள்.என்றாலும் சுய ஜாதகத்தில் வலுவான தசா புத்தி அமைப்பு இருக்கும் பட்சத்தில் நல்ல விதமாக தடைகளை கடக்க முடியும்.

பரிஹாரம்:

பெருமாள் வழிபாடு.அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு. வியாழன் தோறும் தக்ஷிணா மூர்த்தி வழிபாடு. இவை அனைத்தும் சிக்கல்களை சமாளிக்கும் ஆற்றலை வழங்கும்.

By
Ashwin Kumar

1 comment:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP