-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு ராசி

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

ஏற்கனவே ஜென்ம சனி. இப்பொழுது ஜென்ம குரு வேறா??இவர் என்ன தன் பங்கிற்கு செய்ய போகிறார்?

தனுசு ராசி அன்பர்களின் மன நிலை இப்படி தான் உள்ளது.
ஆனால் அவரே ராசி நாதன் ஆகிற்றே. அவரே அனைத்து பாப கிரகங்களின் சாப எண்ணங்களை மாற்றி சுப பலனை அருள் புரியும் முழு முதற் சுபர் ஆயிற்றே?அவரே உங்கள் வீட்டை ஆட்சிக்கு மிஞ்சிய மூலத்திரிகோண வீடாய் கொண்டவர் ஆயிற்றே?இத்தனை நல்ல விஷயங்கள் இருப்பதால் ஜென்ம குரு கடும் கெடுபலன்கள் தர மாட்டார்.

ஏற்கனவே ராசியில் சனி கேது இணைவு உள்ளது. அங்கேயே குருவும் வரும் போது இரு பாப கிரகங்களுக்கும் தன்னுடைய சுப வலிமையை கொடுப்பார்.அதே சமயம் ஆட்சி வீடாக இருப்பினும் இரு பாபியர்களுடன் அவர் சற்று தன் சொந்த வலிமையை இழக்கவே செய்வார்.

இருப்பினும் சனி பகவான் அவரது மகர ராசிக்கு இடம் பெயர்ந்த பின்பு குரு பகவான் கேதுவுடன் மட்டும் இணைந்து கேளா யோகத்தில் அருள் புரிவார்.

தனுசு ராசி அன்பர்கள் இயற்கையிலேயே பெரும்பாலும் பக்திமான்கள். உங்களை முன்னுதாரணமாக கொண்டே பலருக்கும் ஆன்மீகம் பற்றிய புரிதல் வருகிறது.ராசியிலேயே ராசிநாதன் குரு பகவான் ஆட்சி பெறுவதால் அங்கேயே கேதுவும் இருப்பதால் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

குருவின் பார்வை 5ம் வீட்டில் படுவதால் குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.காதல் போன்ற விஷயங்களில் இளைஞர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும்.இருப்பினும் 7.5 சனியின் இறுதி கட்டத்தில் சனி தன்னாலான வில்லங்கத்தை செய்வார் என்பதால் எதற்கும் தயாரான மன நிலையோடு இருத்தல் வேண்டும்.

குருவின் 9ம் பார்வை 9ம் வீட்டில் படுவதால் உங்களால் இயன்ற ஆன்மீகம் தொடர்பான உதவிகளை பிறருக்கு செய்வீர்கள்.

குருவின் 7ம் பார்வை 7ம் வீட்டில் படுவதால் வாழ்க்கை துணையோடு இருந்து வரும் பிணக்குகள் இனி சற்று குறைந்தவாறு இருக்கும்.அதேபோல் பிரிந்த நண்பர்கள் உடன் சேரும் வாய்ப்பும் உண்டாகும்.

குரு ராசியில் அமரும் போது உடல் எடையை அதிகரித்து செல்வார் என்பதால் உடல் பயிற்சி அல்லது உங்களால் இயன்ற வழிமுறைகளை கையாண்டு நல்ல உடற் கட்டோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும் சுய ஜாதகத்தில் அதற்கு எதிரான அமைப்புகள் இருப்பின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு.

ஜென்ம சனியை விட ஜென்ம குருவின் எதிர்மறை பலன்கள் என்பது என்றென்றும் குறைவானது.அவரே உங்களின் ராசிநாதன் என்பதால் அதிக அளவில் கெடுதல்களை செய்ய மாட்டார்.

இருப்பினும் 7.5 சனியின் மூன்றாம் சுற்று முடிவு பெற இன்னும் சில ஆண்டுகள் உள்ளதால் நீங்கள் கடன் வாங்குதல்,ஜாமீன் கையெழுத்து போடுதல்,பெரிய அளவில் முதலீடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இருப்பினும் சுய ஜாதகம் மிக வலுவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கைகளை சுட்டுக் கொள்ளாத அளவு நீங்கள் முயற்சிக்கலாம்.மற்றோர் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:


குரு ஸ்தலங்களில் குரு பெயர்ச்சி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழன் தோறும் இனிப்பு,வெள்ளை கொண்டைக்கடலையை கோவில்களில் படையல் இட்டு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மனதில் குழப்பங்கள் குறைய வழிபாடு ,தியானம்,யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முருக பெருமான் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.அதுவே சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்ளும் மன திடத்தை கொடுக்கும்.

By
Ashwin Kumar

1 comment:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP