-->
Showing posts with label child born on amavasya tithi. Show all posts
Showing posts with label child born on amavasya tithi. Show all posts

2015-12-14

EFFECTS OF BIRTH ON AMAVASYA TITHI - TamilJothidamTips

அமாவாசையில் பிறந்தவன் – கெட்டவனாமே.... மெய்தானா...?

இன்று வேலூர் ஜோதிடம் வாட்ஸ் அப் கிளபில் நடந்த கருத்துரையாடல்கள் .
அமாவாசையில் குழந்தை பிறந்தால் உண்டாகும் பலன்... 
அமாவாசையை ஆறு பாகங்களாக பிரித்து, அவைகளுள்...
1 ம் பாகம்....பிறந்தால்
பொருளழிவு.
2 ம் பாகம்.. தாயையும்
3 ம் பாகம்..தகப்பனையும்
4.. பாகம்..தாய் மாமனையும் கொன்றுவிடும்..
5 ம் பாகம் குழந்தை மறிக்கும்..
6 ம் பாகம் பிறந்தால்
மட்டுமே எவ்வித தோஷமும் கிடையாது..
+++பூர்வ பராசர்யம்+++
அமாவாசையில் பிறந்த தாய் தந்தை எத்தனை சண்டைகள் வந்தாலும் பிரிவினை வரது
அமாவாசையில் பிறந்தால் எங்கேயும் எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு திதி, சூன்யம் பாதிப்பு இருக்காது
திரு .... ஐயா அமாவாசையை 6ஆக எப்படி பிறிப்பது 10 10 நாழிகையாகவா
அமவாசையில் ஒரு பிறந்தால் மட்டும் தோஸம் ஆகும்...என்பது சாஸ்திரமாக இருந்தாலும் அனுபவத்தில் ஒன்னாம் பாகத்தில் பிறந்து தனலாப ஸ்தானங்கள் கெட்டிருந்தால் மட்டுமே பொருளழிவு ஏற்படுகிறது...மேலும் அந்த, அந்த காரக கிரகமும்,அந்த ஸ்தானமும்,ஸ்தானாதிபதியும் கெட்டிருந்தால் மட்டுமே தோஸநிலை சொல்லலாம் என்பது அடியேனின் கருத்தாகும்,சபையோர்களே....அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!!
லக்னாதிபதியாக சந்தரன் இருந்து நீச்சமானலோ கெட்டாலோ தினமும் பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது, அரிசி, வீட்டில் உள்ள கிணற்றிலோ, போர் வெல்லிலோ தண்ணீர் வற்றாமல் பார்த்துக் கொள்வது. படுக்கையில் தலையணை அடியில் சந்திர காயத்ரி எழுதிய வெள்ளி தகட்டை வைத்து படுபபது பாதிப்பை குறைக்கும். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் பால் பொருட்கள் வியாபாரம் செய்ய கூடாது. இந்த அமைப்பில் ஏழாம் பாவம் சுத்தமாக இருந்தால் அந்த ஜாதகர் 24 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது.
மொத்த பரம நாழிகையை ஆறாக பிரித்துக்கொண்டால் 10 நாழிகைதான் சற்றேறக்குறைய வரும்...மேலும் மரணத்திற்கொப்பான
கஷ்டம் எனவும் எடுத்துக்கொள்ள வேண்டும்...
பரிகாரமாக..பசு கன்றுகளை தானமாக கொடுக்கலாம.
மேற்சொன்ன குறிப்பு பூர்வ பராசர்யம் ஏழாவது அத்தியாயத்தில்
அரிஷ்டாத்யாயத்தில் உள்ளது...நன்றி..
ஸவாமி ஐயா! அமாவாசை 60நாழிகை இருந்தால் தான் 10-10 நாழிகையாக பிரிக்க முடியும். இல்லையென்றால் அமாவாசை இருக்கும் மொத்த நாழிகையை 6ஆல் வகுத்து வரும் நாழிகையை 1பாகமாக கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.🙏
ஜோதிட வணக்கம்
ஐயா! மிகச்சிறந்த இன்றொரு தகவல்.
அமாவாசை திதியில் பிறந்த பலன் அருமை. இந்த திதியில் பிறந்தவர்கள் highly technical skills இருக்கக்கூடியவர்கள். minute repairing கைவல்லவர்கள். இது போன்ற கூர்மையான திறமை இருப்பதால் ஒரு சிலர் அமாவாசையில் ஆண் பிறந்தால் திருடனாவான் என்றும் பெண் பிறந்தால் தவறான வழிகளில் கூட செல்வாள் என்பார்கள். அதாவது இவர்கள் எந்த துறையில் சென்றாலும் சிறக்க வாய்ப்பு என்பதால் திருடனுக்கு ரொம்பவே திறமை இருக்கும் என்ற நோக்கில் கூறுவது.

Vellore Bala Jothidar

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP